கும்பகோணம்: அம்மாசத்திரத்தில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா இன்று நடைபெற உள்ளது. அம்மாசத்திரத்தில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம். இந்த கோவிலில் இன்று மாலை சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடுகளுடன் நடைபெற உள்ளது.