குன்னூர்: முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 20ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடை பெற்றது. நேற்று காலை கணபதிஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.