Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழ் புத்தாண்டு: கோவில்களில் ... பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில்  தீர்த்தவாரி! பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
01:04

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 80 பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து, வேலாயுதசாமியை வழிப்பட்டனர். பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோவில் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார் மற்றும் பக்தர்கள் 80 பேர் மாலை 6.00 மணியளவில் பால்குடம் எடுப்பதற்கு, கோவில் அடிவாரத்தில் உள்ள ராஜகணபதி கோவிலிலுக்கு வந்தனர். அங்கு, பூஜையை முடித்துவிட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். உடன் மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில் காவடி மற்றும் மேள தாளம் முழங்க மலை கோவிலை சுற்றி பால்குடத்துடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின், மலை மேல் சென்று, வேலாயுதசாமிக்கு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தில் இருந்த பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின், வேலாயுதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வேலாயுதசாமியை வழிபட்டனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர், சஷ்டிகுழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். சிவலோகநாதர் கோவில்கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், முருகருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar