Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவுர்ணமி பூஜை எப்போது? பங்குனி உத்திர திருவிழா: பால்குடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டு: கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
01:04

ஆனைமலை : புத்தாண்டை முன்னிட்டு ஆனைமலையை சுற்றியுள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனைமலை அடுத்துள்ள சேத்துமடை கிராமத்தில் உள்ளது தெய்வகுளம் காளியம்மன் கோவில். நேற்று சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக தீர்த்தம் எடுத்துச்செல்ல வந்தனர். ஆனைமலைஅடுத்துள்ள சேத்துமடை கிராமத்தில் அன்னப்பாறை ஆற்றின் கரை அருகில் அமைந்துள்ளது தெய்வகுள காளியம்மன் கோவில். நுாற்றாண்டு பழமையான இந்த கோவிலில் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தக்கிணறு உள்ளது. இந்த பகுதியில் கடுமையான வறட்சியும், பஞ்சமும் நிலவிய காலத்திலும், இந்த கோவிலின் கிணற்று நீர் வற்றாமல் இருந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள காளியம்மன் சுயம்பாக உருவானது ஆகும். இங்குள்ள நாகதாளி மரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் உள்ளவர்கள் புதிதாக வாகனங்களை வாங்கும்போது இங்கு வந்து வாகனத்துக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனைமலையை சுற்றியுள்ள பிற வட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்கு, தமிழ் புத்தாண்டு தினத்தில் தீர்த்தம் எடுத்து செல்ல இங்கு வருகின்றனர். நேற்று மட்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனம், டெம்போ,லாரிகள், பஸ்களில் வந்தனர். புத்தாண்டு சிறப்பு வழிபாடு: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு மாசணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 6.30 மணி முதல் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரமணமுதலிபுதூர் மண்கண்டீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருமண தடை அகல , சிவபெருமானுக்கு பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar