ஞானமும் மங்கலமும் அருளக்கூடியது தட்சிணாமூர்த்தி தரிசனம். கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் நிலையில் அருளும் தட்சிணாமூர்த்தி, பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு கோலங்களில் அருள்பாலிக்கிறார். அந்தத் தலங்களில் சில இங்கே:
தலை சாய்ந்த நிலை- வேலூர் மாவட்டம்-திருவூறல்.
சிற்ப அழகு- ஆலங்குடி
வீராசன நிலை- சென்னை, திரிசூலம்
யோகாசன மூர்த்தி- அனந்தழர், ஆந்திரா
வியாக்யான மூர்த்தி - காஞ்சி அருகில் அகரம் கோவிந்தவாடி.
நந்தியுடன் கூடிய மூர்த்தி - வள்ளலார்கோயில்-மயிலாடுதுறை
வீணையுடன் தட்சிணாமூர்த்தி-நஞ்சன்கூடு
மிருதங்க தட்சிணாமூர்த்தி-கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.
வீணையுடன் நின்ற நிலையில்- நாகலாபுரம் வேதநாராயணன் திருக்கோயில், திருத்தணி.