தஞ்சை பெரிய கோயிலில் சப்தமாதர்களுள் ஒருவரான வாராஹி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இருள் கவ்வும் மாலை வேளையில் இங்குள்ள வாராஹியைத் தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார அபிவிருத்தியும் கிடைக்கும். பில்லி, சூனியம், திருஷ்டி மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்க சனிக்கிழமைகளில் வழிபடுதல் நலம் என்கிறார்கள்.