காரியாபட்டி: மல்லாங்கிணர் அண்ணாநகரில் உள்ள மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா, பத்து நாட்களுக்கு முன் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து, பறவைக்காவடி, அக்னிச்சட்டி எடுத்து, பூக்குழி இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.