Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டத்துவிநாயகர் கோயிலில் சங்கடஹர ... கூட்டேரிப்பட்டு கோவில் கட்டுமானப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலுக்கு சீல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2014
12:06

ஓசூர்: ஓசூரில் உள்ள, புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் உண்டியலுக்கு, நேற்று சீல் வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில், 1,500 ஆண்டு பழமையான சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மே மாதம், மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம், 22ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி சிறப்பாக நடந்தது. இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலை, ராம்நகர் பகுதி பொதுமக்கள் நிதி உதவியுடன், தனிநபர்கள் சிலர் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இதனால், நேற்று மாலை ராம்நகர் பகுதிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் அருகில் இருந்த ராமர் கோவில் உண்டியலுக்கு சீல் வைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள் சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற ராம்நகர் பகுதியை சேர்ந்த, 55க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உண்டியலில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டுமென, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்திய, சப்-கலெக்டர் பிரவின்நாயர், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். இதில், உண்டியல் சீலை, அதிகாரிகள் அகற்றுவதாக ஒப்புக்கொண்டதால், பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar