சிவகங்கை:சிவகங்கை நகரில் உள்ள அம்மன் கோயில்களில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.சிவகங்கை நேரு பஜார் வீரமாகாளி அம்மன் கோயில் பூக்கரக பூச்சொரிதல் விழா கடந்த முதல் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. 6ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தனர். நேற்று இரவு மின்னொளி பூ ரதமும், இன்னிசை நிகழ்ச்சியும், அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடந்தது.
*பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 4 ம்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அன்று மாலை அம்மன் சன்னதி முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், மாலை சந்தன காப்பு அலங்காரமும் அதனைத்தொடர்ந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.*சிவகங்கை குழந்தாபுரி என்னும் வீரமாகாளி அம்மன் கோயில் பூச் சொரிதல் விழா நடந்தது.கடந்த 24ம் தேதி காலை கொடியேற்றமும், அன்று மாலை காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. செவ்வாய் கிழமை பாலாபிஷேகமும், பூக்குழி இறங்குதலும்,பக்தர்கள் முளைப்பாரி எடுத்தலும் நடந்தது.நேற்று காலை சிறப்பு அபிஷேகம், பூச்சொரிதல் விழா நடந்தது. மாலை நெல்,அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரத ஊர்வலம் நடந்தது.*மதுரை ரோடு ஸ்ரீஆதி வீரமாகாளி அம்மன் கோயிலிலும் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது.பக்தர்கள் பால்குடமெடுத்து, பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அனைத்து கோயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.