சேலையூர்: அகோபில மடத்திற்கு சொந்தமான யானை, மாலோலனுக்கு உரிமம் வழங்குவதற்காக வனத்துறையினர், அந்த யானையை ஆய்வு செய்தனர். தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள அகோபில மடத்தில், மாலோலன் என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கான உரிமம் புதுப்பிப்பதை முன்னிட்டு, நேற்று, வனத்துறையினர், மாலோலனை ஆய்வு செய்தனர்.