பதிவு செய்த நாள்
19
செப்
2014
10:09
திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது, வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு உற்சவம், வரும் 26ம் தேதி துவங்குகிறது. அக்., 4ம் தேதி வரை, ஒன்பது நாட்களுக்கு இந்த விழா நடக்க உள்ளது.பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திருமலை முழுவதும், வண்ண விளக்கு அலங்காரம், கடவுள் உருவங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, மலர் கண்காட்சி, அலங்கார வளைவு, தோரண வாயில், புகைப்பட கண்காட்சி போன்றவை அமைக்கப்படுகின்றன.வாகன சேவை நடைபெறும், மாட வீதி முழுவதும், பல வண்ண பெயின்டில், ரங்கோலி வரையப்பட்டுள்ளது. ஏழுமலையான் திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் உண்டியல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.