பதிவு செய்த நாள்
19
செப்
2014
10:09
பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல், 21 நாட்களில் ஒரு கோடியே 34 லட்சத்து ஆயிரத்தி 397 ரூபாய் கிடைத்து உள்ளது.பழநி மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 907 கிராம், வெள்ளி 6 ஆயிரத்தி 039 கிராம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கரன்சி 526, ரொக்கமாக ஒருகோடியே 34 லட்சத்து ஆயிரத்தி 397 ரூபாய் கிடைத்துள்ளது.உண்டியலில், தங்கத்தினாலான திருமாங்கல்யம், வேல், செயின், வளையல், தகடுகள் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரம், நாணயம்,வேல், பாதம், கொலுசு, வீடு, பித்தளையாலான மணி, வேல், உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ் உடனிருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :