பதிவு செய்த நாள்
20
செப்
2014
11:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மழை வேண்டி கோயில் குருக்கள் சிறப்பு வர்ண ஹோமம், பூஜை நடத்தினர். தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டுள்ளது. நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு மழை வேண்டி வர்ண ஹோமம் நடத்திட, இந்து அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம் கோயில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு, நந்தி சிலை உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பினர். பின்,கோயில் குருக்கள் சர்வ சாதகம் கணபதிராமன், விஜயகுமார் ஒரு குண்டத்தில் வர்ண ஹோமம் மற்றும் பூஜை நடத்தினர். பின், நடந்த மகா தீபாரதனையில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், காண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.