மேலுார் : சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் 500 பேர், பிரதமரின் ’துாய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து அழகர்கோவில் கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தினர். கல்லுாரி சேர்மன் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கோயில் துணைகமிஷனர் வரதராஜன் துவக்கி வைத்தார்.