காசியிலுள்ள வக்கிர துண்ட விநாயகரை பக்தர்கள் படா கணேஷ் என்று அழைக்கின்றனர். இதற்கு மகா கணபதி என்பது பொருள். இங்கு கங்கை கரையிலுள்ள 64 தீர்த்தக் கட்டங்களில் இரு படித்துறைகள் விநாயகர் பெயரில் உள்ளன. அவை சித்தி விநாயக் காட், கட்க விநாயக் காட் என்பதாகும். மேலும், விஸ்வநாதர் கோயில் பிரகாரத்தில் 56 விநாயக மூர்த்தங்கள்(சிலைகள்) உள்ளன. இந்த விநாயகர்களின் பெயரை, சிவகணங்கள் காசியை ஆண்ட சோமகாந்த மன்னருக்கு எடுத்துச் சொன்னதாகவும், அதைக் கேட்டதால் உண்டான புண்ணியத்தால் விநாயகரே நேரில் வந்து புஷ்பக விமானத்தில் மன்னரை அழைத்துச் சென்றதாகவும் காசிபுராணம் கூறுகிறது.