சக்திபீடங்களில், காஞ்சிபுரத்தை காமகோடிபீடம் என அழைக்கின்றனர். காமம் (ஆசை) அற்றுப் போகும் இடமேகாமகோடி. இங்குள்ள அம்பாள் காமாட்சி. மோட்சபுரிகள்(வணங்கினாலே மோட்சம் தரும் தலங்கள்) என போற்றப்படும் ஏழு தலங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் விளங்குகிறது. இங்கு அம்பிகை மணலால் லிங்கம் அமைத்து சிவனை வழிபட்டாள். பஞ்சாக்கினி (நெருப்பு) வளர்த்து அதன் மீது அமர்ந்து தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். சரஸ்வதி, லட்சுமி,பார்வதியின் அம்சமாகத் திகழ்கிறாள் அன்னை காமாட்சி.