Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டுவர ... வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம்! வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை தேவஸ்தான வருமானம் ரூ.10 கோடி குறைந்தது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 அக்
2014
11:10

திருப்பதி : திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானத்தில், 10 கோடி ரூபாய் குறைந்துள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை, 2010ல், தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

25 ஆயிரம் பக்தர்கள் : இதற்கு, பக்தர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தினமும், 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள், இந்த சேவை மூலம் ஏழுமலையானை தரிசித்தனர். இதன் மூலம் தினமும், 50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. 2013- - 14 நிதிநிலை அறிக்கையில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் மூலம், 190 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது. தற்போது, 300 ரூபாய் விரைவு தரிசன சேவையை, பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், இணையதளம் மூலம் அதற்கான முன்பதிவை, ஆகஸ்ட் முதல் தேவஸ்தானம் நடைமுறைபடுத்தியது.

இந்த முறையில் தினமும், 11 ஆயிரம் டிக்கெட்கள் இணையதளம் மூலம் அளிக்கப்படுகிறது. அதில், 5,832 டிக்கெட்கள் மட்டுமே, முன்பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட், 20ம் தேதியில் இருந்து, அக்டோபர், 24ம் தேதி வரையான, 65 நாட்களில், 7.15 லட்சம் டிக்கெட்கள் இணையத்தில் ஒதுக்கப்பட்டன. அதில், 3.53 லட்சம் டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டன. கடந்த, 65 நாட்களில், இந்த சேவை மூலம், 21.45 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். ஆனால், 11.35 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது. இதனால், தேவஸ்தானத்திற்கு, 10 கோடி ரூபாய் வருமானம் குறைந்தது. இணையதளம் மூலம், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் குறைவாக முன்பதிவு செய்யப்படுவதால் அதை ரத்து செய்து விட்டு, வழக்கம் போல் திருமலையில், ’கரன்ட் புக்கிங்’ கீழ் அதை வழங்க வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை தேவஸ்தானம் ஏற்கவில்லை. விரைவு தரிசன டிக்கெட் இம்மாதம், 30ம் தேதி அல்லது, நவ., 1ம் தேதி முதல், திருமலையில் வழங்கும், ’கரன்ட் புக்கிங்’ விரைவு தரிசன டிக்கெட்டை ரத்து செய்து விட்டு, தினமும், 18 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்களை இணையதளம் மற்றும் அஞ்சலகம், இ - தர்ஷன் கவுன்டர்கள், மீ - சேவா கவுன்டர்களில் வழங்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar