கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) முயற்சியில் வெற்றி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2014 02:11
ஆடம்பரமாக வாழ விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!
குரு டிச. 3ல் 12-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சுமாரான நிலையே. குருவால் ஏற்படும் சிரமமும் இறுதியில் நன்மையாகவே முடியும். சூரியன், சுக்கிரன் ஆகியோரால் சிறப்பான பலன் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்களிடம் சுமூக நிலை உருவாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.
தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபட்டு பலன் பெறுவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். நவ. 21க்கு பிறகு அரசு வகையில் தொல்லை வரலாம். எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சுக்கிரனால் செல்வாக்கு உண்டாகும். அதிகாரிகளின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். கோரிக்கை ஓரளவு நிறைவேறும். சக ஊழியர்களின் ஆதரவு நல்லமுறையில் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசு வகையில் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகள், சிறப்பான முன்னேற்றம் காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவர். டிச. 7 க்கு பிறகு புதனின் அருளால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப் பெறுவர். கால்நடை செல்வம் பெருகும். வழக்கில் சாதகமான நிலை உருவாகும். பெண்களுக்கு குடும்பத்தினர் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும்.புத்தாடை, அணிகலன் பெற்று மகிழ்வர். பிள்ளைகளின் செயல்பாட்டில் மகிழ்ச்சிய டைவர்.