வீரட்டானேஸ்வரர் கோவிலில் 17ம் தேதி 1008 சங்கு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2014 11:11
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி 1008 சங்கு அபிஷேகம் நடக்கிறது. பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி அன்று பகல் 11:00 மணிக்கு அம்பாள் பெரியநாயகிக்கும், வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கும் ஆகமவிதிப்படி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்கு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் நாகாபரண அலங்காரத்திலும், அம்பாள் வெள்ளி அங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலை 6:30 மணிக்கு இன்னிசை நாதஸ்வர கச்சேரி, இரவு 8:00 மணிக்கு ÷சாடசோபசார தீபாராதனையும் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது.