ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு 31 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள், தங்களின் வேண்டுதலுக்காக காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதற்காக இந்த கோவில் வளாகத்தில் 16 நிரந்திர உண்டியல்களும் 6 தட்டு காணிக்கை உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று காலை உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் உதவி ஆணையர் அனிதா, இந்து சமய அறநிலைத்துறையின் கோவை மாவட்ட உதவி ஆணையர் (சரிபார்ப்பு) கருணாநிதி, கிணத்துகடவு ஆய்வாளர் முருகப்பன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. மொத்தம் உள்ள நிரந்திர 16 உண்டியல்களில் 22 லட்சத்து 84 ஆயிரத்து 20 ரூபாயும், தட்டுகாணிக்கை உண்டியலில் 8 லட்சத்து 78 ஆயிரத்து 943 ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.மாசாணியம்மன் கோவில் இந்தமாத உண்டியல் வருமானம் ரூ.31 லட்சத்து 62ஆயிரத்து 943.அம்மனுக்கு காணிக்கையாக 167 கிராம் தங்கம் மற்றும் 322 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.