முருகன் வேலில் சொருகப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் 1.43 லட்சத்திற்கு ஏலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 02:04
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்பது நாட்கள் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்கள் இடும்பன் பூஜையில் வைத்து பங்குனி உத்திர விழா நாள் அன்று நள்ளிரவு ஏலம் விடப்படும் அதன்படி நேற்று இரவு 11:00 மணிக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள், குடும்பப் பிரச்சினை உள்ளவர்கள், வியாபாரத்தில் கஷ்டமடைந்தவர்கள் என பலர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். முதல் நாள் எலுமிச்சம் பழம் 45 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் இரண்டாம் நாள் பழம் 15 ஆயிரம் என 9 எலுமிச்சம் பழங்கள் மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் சென்னை, திருச்சி,புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.