Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீப ... சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டலபூஜைக்கு பாதுகாப்பு: சன்னிதானத்தில் கூடுதல் போலீசார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2014
12:12

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு 7 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து வரும் 23ம் தேதி தங்க அங்கி பவனி புறப்படுகிறது. மண்டலபூஜைக்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இருபது துணை ஆணையர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், 42 இன்ஸ்பெக்டர்கள், 110 எஸ்.ஐ.,க்கள், 2150 போலீசார் புதிதாக நேற்று பொறுப்பேற்றுள்ளனர். சபரிமலை சன்னிதானம் 19 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாகும் போது கட்டுப்படுத்த 140 மத்திய ரிசர்வ் அதிரடி படையினரும், 60 தேசிய பேரிடர் தடுப்பு படை போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்களுடன் ஆந்திரா, கர்நாடகா போலீசாரும் பணியில் ஈடுபடுவர். கேரளாவின் ரகசிய போலீசாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு கூட்டம் வந்தாலும் அவர்களைகட்டுப்படுத்தி பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் கிடைக்கச் செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பம்பையிலும் இதுபோன்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், மணல் பரப்பில் பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பவும் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

திடீர் மழை: கார்த்திகை மாத தொடக்கத்தில் சபரிமலையில் மழை பெய்யும். அதன் பின்னர் மகர விளக்கு காலம் முடியும் வரை மழை பெய்வது இல்லை. ஆனால் இந்த சீசனில் அடிக்கடி மழை பெய்து வந்தது. நேற்று மாலை மூன்று மணி முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. ஐந்து மணிக்கு மழை சாரலாக பெய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar