பதிவு செய்த நாள்
16
ஜன
2015
10:01
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலை முன்னிட்டு, சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.
கோயிலில் வழக்கமாக தினம் வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து, பிரசாதம் மட்டும் சுவாமிகளுக்கு படைத்து பூஜைகள் நடைபெறும். தைப் பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து, அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு, வைத்து மடப்பள்ளியில் இருந்து, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன.பின் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சன்னதிக்கு பொங்கல் பானைகள் எடுத்து வரப்பட்டு, சுவாமி முன் படைக்கப்பட்டது. தைப் பொங்கல் அன்று மட்டுமே மண்பானையில் பொங்கல் வைத்து பானையுடன் படைக்கப்படுவது இக்கோயில் சிறப்பு.