பதிவு செய்த நாள்
06
பிப்
2015
11:02
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள, 158 ஆண்டு பழமை வாய்ந்த லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், இம்மாதம், 8ம் தேதி நடக்கிறது.
எண்.4 வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட நாயக்கனூரில் லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் நரசிம்மர், மகாலட்சுமி மற்றும் பிரகலாதனுடன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். வளாகத்தில் சுதர்சனா, தன்வந்தரி மற்றும் ஆழ்வார், ஆசார்யார் சன்னதிகள் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன.
இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று மாலை, 5:00 மணிக்கு பகவான் பிரார்த்தனை, நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயண நிகழ்வுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 7ம் தேதி காலை வாஸ்து சாந்தி ஹோமம், தீர்த்த சடாரி பிரசாத வினியோகம், மதியம், 1:00 மணிக்கு ராஜகோபுர சர்வாலய விமான கலச ஆராதனை, 3:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 6:00 மணிக்கு தீர்த்தசடாரி பிரசாத வினியோகம் நடக்கிறது.வரும், 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு ராஜகோபுர, சர்வாலய விமானங்கள், மூலவ, உற்சவ விக்ரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம், திருவீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள், திருப்பணிக்குழுவினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.