திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சித்தலம்பட்டு கிராமத் தில், புதிதாக அமைக்கப் பட்டுள்ள, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் திருச்சபை திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி கட்டுதலும், இதைதொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு விழாவும் நடந்தது. விழாவில், மணக்குள விநாயகர் கல்வி நிறுவன துணைத் தலைவர் சுகுமாறன், காங்., கமிட்டி உறுப்பினர் முத்தழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.