திண்டிவனம்: வெள்ளிமேடு கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. இதையொட்டி 7 ம் தேதி மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 4 ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மஹா கும்ப புறப்பாடு நடந்தது. மூலவர் சீனிவாச பெருமாள் விமான கலசம், தாயார், கருடாழ்வார், துவாரபாலகர்கள் சன்னதிகளுக்கு சம்ப்ரோக்ஷணம் நடந்தது.