Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோவில் விழாவில் பங்கேற்று ஸ்வாமி ... அரங்கநாதர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்காபுரம் மாரியம்மன் விழாவுக்காக போக்குவரத்தில் மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2015
12:02

ஊட்டி : பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும், 27ம் தேதி முதல், அடுத்த மாதம், 3ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக, கூடலூர் - தெப்பக்காடு - மசினகுடி - பொக்காபுரம் சாலையில், இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கான தடை தளர்த்தப்படுகிறது. இந்நாட்களில், இச்சாலையில், எந்நேரமும் வாகன போக்குவரத்துக்கு தடை இல்லை.ஆனால், தலைக்குந்தா - கல்லட்டி - மசினகுடி சாலையில், மேற்கண்ட ஐந்து நாட்களுக்கு மட்டும், பக்தர்களின் வசதிக்காக, இச்சாலையில் செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் அரசு வாகன போக்குவரத்துக்கான தடை தளர்த்தப்படுகிறது. இதர வாகனங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையில், எந்த மாற்றமும் இல்லை. இரவு நேரங்களில், எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள், கல்லட்டி, மசினகுடி, தெப்பக்காடு, தொரப்பள்ளி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில், சமையல் செய்வது, வனத் தீ முட்டுவது, பட்டாசு வெடிப்பது, பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவது, மேளம் கொட்டுவது, ஒளி பெருக்கிகளை பயன்படுத்துவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மீறுவோருக்கு, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இரவு வாகன போக்குவரத்து காரணமாக வன விலங்குகளுக்கு தீங்கு ஏற்படுவதை தவிர்க்க, வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை செலுத்த வேண்டும். வாகனங்களில் அதிகளவு ஆட்களை ஏற்றிச் செல்ல கூடாது. விழாவையொட்டி, பொக்காபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில், காவல் துறையினரால் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது. அவசர உதவிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறையை, "0423-2526939 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar