புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் நந்தி கிடையாது. கொடி மரம் இல்லை. பொதுவாக மூலவர் கிழக்கு நோக்கி இருப்பார். இங்கு வடக்கு நோக்கி மூலவர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் லிங்கத்திற்கு பதில் ஒரு குழி மட்டுமே உள்ளது. இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படி அமைக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள்.