தீபாராதனையின் போது கோயிலில் எழும் ஒலி நம் காதில் விழும். கோயிலுக்கு வரும் சிலர் லோகாயத விஷயங்களை பேசலாம். அது உண்மையான பக்தர்களின் இறையுணர்விற்கு இடையூறாக இருக்கலாம். வேண்டாத வார்த்தைகள் காதில் விழாது. மணியோசை கேட்டு துர்தேவதைகள், ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர். பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறது. மணிஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.