Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜபெருமாள் கோவில் ... செல்வ முத்து மாரியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர் சக்கரம் பலவீனத்தால் கோவில் தேரோட்டம் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2015
11:05

திருவண்ணாமலை: ஆரணி, வரதராஜபெருமாள் கோவில், தேர் சக்கரம் பலவீனமாக இருந்ததால், நேற்று நடக்க இருந்த தேரோட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆரணி டவுன் சார்பானார் பேட்டை பகுதியில், பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், 90ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை, 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பெருந்தேவி சமேத கில்லா வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, 9 மணி அளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. 10 அடி தூரம் மட்டும் தேர் இழுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. வீதி உலா வராமல் திடீரென தேர் நிலை நிறுத்தப்பட்டது, பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சந்திரசேகரன் கூறியதாவது: தேரின் சக்கரம், இரண்டு நாட்களாக சோதனை செய்யப்பட்டு வந்தது. இதில் சக்கரம் மிகவும் பலவீனமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேருக்கு, எட்டு லட்ச ரூபாய் மதிப்பில், புதிதாக இரும்பு சக்கரம் செய்ய பெல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய சக்கரம் தயாரானவுடன் தேரோட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar