புதுச்சத்திரம்: வில்லியநல்லூர் ரேணுகாம்பிகை கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் ரேணுகாம்பிகை ÷ காவிலில் செடல் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான செடல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி அன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு கழுமரம் ஏறுதல், 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. நேற்று மஞ்சள் நீர் உற்சவமும், மாலை 5:00 மணிக்கு சாகை வார்த்தலும் நடந்தது.