பதிவு செய்த நாள்
05
ஆக
2015
11:08
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா சர்ச் திருவிழாவில், சர்ச் வளாகத்தினை சுற்றி, மாதாவின் முன்னோட்ட திரு உருவப்பவனி நடந்தது. இன்று (ஆக., 5 ) முக்கிய வீதிகளில் திரு உருவப்பவனி நடக்கவுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஆக., மாதம் நடக்கும். இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம் ஜூலை 26 பிஷப் இவான்அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.திருவிழா நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு முதல் ஜெபமாலை, 5 க்கு முதல் திருப்பலி, 5,45 க்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 மணிக்கு இரண்டாம் ஜெபமாலை, 3 க்கு மூன்றாம் ஜெபமாலை, மறையுரை அருளிக்க ஆசிர். இரவு 7.15 க்கு நான்காம் ஜெபமாலை நற்கருணை ஆசீர், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஆக., 2 ல் புதுநன்மை, நற்கருணைப்பவனி நடந்தது. நேற்று இரவு 9 மணிக்கு முன்னோட்டமாக மாதாவின் திரு உருவப்பவனி, சர்ச் வளாகத்திற்குள் நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசித்தனர். இன்று (ஆக., 5 )மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ, தூத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ், திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா ஆகியோர் பங்குபெறும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.இரவு 7 மணிக்கு மாதாவின் திரு உருவ பவனி நடக்கவுள்ளது.