கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னிதியில் உள்ள கோபால விலாசத்திற்கு எழுந்தருள்கின்றனர். அப்போது மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துகின்றனர். குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்யப்படும். இறைவனுக்கு ஏது குளிரும், வெயிலும்.. ஆனாலும், இவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது.