ஸ்ரீவில்லிபுத்துõர் கோவிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான் பட்டர் வீட்டிற்கு செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி ஆண்டாளுக்கு வரவேற்பு தருவர். இதை, பச்சை பரத்தல் என்பர். காண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு ஆகியவற்றை ஆண்டாளுக்கு நைவேத்யம் செய்வர். திருமணம் முடிக்க உள்ள பெண்கள் இதை பிரசாதமாக சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தார்கள். அதன் நினைவாக இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.