பொதுவாக நெடுஞ்சாலையில் உள்ள கோயில்களில், வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்கள் காணிக்கையாக காசு செலுத்துவார்கள். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகிலுள்ள சாஸ்தா கோயிலில் டிரைவர்கள் வெடி வெடித்து காணிக்கை செலுத்துகின்றனர். சிவகங்கையிலிருந்து மானாமதுரை செல்லும் ரோட்டிலுள்ள காட்டுராணி என்ற கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இரண்டு செங்கலை காணிக்கையாக டிரைவர்கள் செலுத்துகிறார்கள். இதன் மூலம் விபத்து நடக்காது என்பது நம்பிக்கை.