Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ... ஜன., 1 முதல்.. கோவில்களில் லெக்கிங்ஸ், ஜீன்ஸ் அணிய தடை! ஜன., 1 முதல்.. கோவில்களில் லெக்கிங்ஸ், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள சரித்திரம் கேட்டால் சனி தோஷம் விலகும்!
எழுத்தின் அளவு:
நள சரித்திரம் கேட்டால் சனி தோஷம் விலகும்!

பதிவு செய்த நாள்

30 டிச
2015
11:12

பெ.நா.பாளையம் :“நள சரித்திரம் கேட்டால், சனி தோஷம் விலகும்,” என, திருச்சி கல்யாணராமன் பேசினார்.கோவை மருதமலை ரோடு, நியூ தில்லை நகர், ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் கோவை பக்தி சொற்பொழிவு மன்றம் சார்பில், வில்லிபாரதம் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: பஞ்ச பாண்டவர்கள் கானகம் வந்தனர். வியாசமுனிவர் நள சரித்திரம் கூறினார். நளன், தமயந்தி யை மணந்தார். நளன் செய்த சிறு தவறால் சனி பகவான், நளனை பிடித்தார். புஷ்கரனோடு சூதாட்டம் ஆடிய நளன், எல்லாவற்றையும் இழந்து கானகம் வந்தார். மனைவி தமயந்தியையும் பிரிந்தார். நாராயண நாமாவை ஒருவன் சொல்லவில்லை என்றால் எப்படி கஷ்டம் வரும் என்பதற்கு நளன் ஒரு உதாரணம். தமயந்தி தாய்வீடு அடைந்தாள். நளன், அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாக பணியில் சேர்ந்தார். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு தமயந்தியை கண்டுபிடித்தார்.

இறுதியில், நளன், தமயந்திக்கு காட்சியளித்த சனி பகவான், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று நளனிடம் கேட்டார். சனி பகவானாகிய நீங்கள் பிறரை பிடித்து இருக்கும் போது, அவர்கள் என் கதையான நளச்சரித்திரம் கேட்டால், அவரை விட்டு, நீங்கள் விலகி விட வேண்டும் என்றார். ஏழரை, அஷ்டம, சனி திசை உள்ளவர்கள் நள சரித்திரத்தில் நளன், தமயந்தி, கார்கோடகன், ருதுபன்னன் ஆகியோர் பெயரைக் கேட்டால் சனி தோஷம் விலகும்.இவ்வாறு, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு ஜன., 14 வரை தினமும் மாலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணிவரை நியூ தில்லை நகர் ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar