Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ... ஜன., 1 முதல்.. கோவில்களில் லெக்கிங்ஸ், ஜீன்ஸ் அணிய தடை! ஜன., 1 முதல்.. கோவில்களில் லெக்கிங்ஸ், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள சரித்திரம் கேட்டால் சனி தோஷம் விலகும்!
எழுத்தின் அளவு:
நள சரித்திரம் கேட்டால் சனி தோஷம் விலகும்!

பதிவு செய்த நாள்

30 டிச
2015
11:12

பெ.நா.பாளையம் :“நள சரித்திரம் கேட்டால், சனி தோஷம் விலகும்,” என, திருச்சி கல்யாணராமன் பேசினார்.கோவை மருதமலை ரோடு, நியூ தில்லை நகர், ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் கோவை பக்தி சொற்பொழிவு மன்றம் சார்பில், வில்லிபாரதம் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: பஞ்ச பாண்டவர்கள் கானகம் வந்தனர். வியாசமுனிவர் நள சரித்திரம் கூறினார். நளன், தமயந்தி யை மணந்தார். நளன் செய்த சிறு தவறால் சனி பகவான், நளனை பிடித்தார். புஷ்கரனோடு சூதாட்டம் ஆடிய நளன், எல்லாவற்றையும் இழந்து கானகம் வந்தார். மனைவி தமயந்தியையும் பிரிந்தார். நாராயண நாமாவை ஒருவன் சொல்லவில்லை என்றால் எப்படி கஷ்டம் வரும் என்பதற்கு நளன் ஒரு உதாரணம். தமயந்தி தாய்வீடு அடைந்தாள். நளன், அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாக பணியில் சேர்ந்தார். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு தமயந்தியை கண்டுபிடித்தார்.

இறுதியில், நளன், தமயந்திக்கு காட்சியளித்த சனி பகவான், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று நளனிடம் கேட்டார். சனி பகவானாகிய நீங்கள் பிறரை பிடித்து இருக்கும் போது, அவர்கள் என் கதையான நளச்சரித்திரம் கேட்டால், அவரை விட்டு, நீங்கள் விலகி விட வேண்டும் என்றார். ஏழரை, அஷ்டம, சனி திசை உள்ளவர்கள் நள சரித்திரத்தில் நளன், தமயந்தி, கார்கோடகன், ருதுபன்னன் ஆகியோர் பெயரைக் கேட்டால் சனி தோஷம் விலகும்.இவ்வாறு, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு ஜன., 14 வரை தினமும் மாலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணிவரை நியூ தில்லை நகர் ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar