ஏகாம்பரநாதரை பதிகம் பாடிசுந்தரர் கண் பெற்ற நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2016 11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று, சுந்தரர் பதிகம் பாடி இடக்கண் பெற்ற திருநாள் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. சமயகுரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், இறைவன் சொல்லை மீறி நடந்து கொண்டதால், அவருக்கு கண் பார்வை இழந்ததாக புராணம் கூறுகிறது. அதனால் அவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பெருமானை வணங்கி, ஆலந்தான் உகந்து என்ற பதிகம் படி இடக்கண் பெற்றார். அந்த விழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும்.இதன்படி, நேற்று காலை, ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி சுந்தரருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணியளவில் சுந்தரர் அலங்கரிக்கப்பட்டு, நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்தார். பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பாடல் பாடி உடன் சென்றனர்.