பதிவு செய்த நாள்
19
பிப்
2016
11:02
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், ஆன்மிகத் தலங்களான திருப்பதி மற்றும் சீரடிக்கு வாரந்தோறும் பயண ஏற்பாடு செய் துள்ளது.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் பர்வீன்’ டிராவல்ஸ் நிறுவனம் இணைந்து, புதுச்÷ சரியிலிருந்து ஆன்மிகத் தலங்களான திருப்பதி மற்றும் சீரடிக்கு வாரந்தோறும் பயண ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் பர்வீன்’ டிராவல்ஸ் நிறுவனம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சீகல்ஸ் ஓட்டலில் நேற்று நடந்தது.
அமைச்சர் ராஜவேலு முன்னிலையில், சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி, பர்வீன் டிராவல்ஸ் மேலாளர் சைரஸ் டேவிட் ஆகியோர் ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டனர். ஆன்மிக பயணம் குறித்த லோகோ’ வை வெளியிட்ட அமைச்சர் ராஜவேலு கூறுகையில், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், விடுமுறையை கழிக்க அதிக அளவில் புதுச்சேரிக்கு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும் விதமாக, ஆன்மிக சுற்றுலா செய்ய பர்வீன்’ டிராவல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளாகும். இதன் மூலம், புதுச்சேரி மக்கள் மற்றும் புதுச்சேரி சுற்றுலா வருபவர்கள் பெரிதும் பயனடைவர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், புதுச் சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் சுற்றுலா கலை நிகழ்ச்சிகள் (÷ராட் ஷோக்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பயண முகவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.