Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்திமலை பஞ்சலிங்க ... திருவெண்ணெய்நல்லூர் வேணுகோபாலசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் திருவெண்ணெய்நல்லூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிதி பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் உத்தரகோசமங்கை கோயில் திருப்பணி
எழுத்தின் அளவு:
நிதி பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் உத்தரகோசமங்கை கோயில் திருப்பணி

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
01:02

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை கோயில் திருப்பணிகள் பாதியில் நிற்பதால் பக்தர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.

உத்தரகோசமங்கையில் பழமையான மங்களநாதர் கோயில் உள்ளது. அங்கு 3 ஆயிரம் ஆண்டு இலந்தை மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றியுள்ளார். அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு மாணிக்கவாசகர் லிங்கவடிவில் உள்ளார். அரிதான மரகத நடராஜர் சிலை உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் ஆருத்ரா தரிசனம் நடக்கும். மற்ற நாட்களில் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டிருக்கும். இக்கோயிலில் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழமை மாறாமல் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டது.

அறநிலையத்துறை சார்பில் முதற்கட்டமாக 2011–12 ல் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் சுவாமி சன்னதியின் வடக்கு, தெற்கு சித்திர மண்டபம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2012–13 ல் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் மேற்கு சித்திர மண்டபம், சுவாமி சன்னதி முதல்பிரகாரத்தின் தெற்கு பகுதியில் 3 பத்திகளில் பாவுகல் (மேற்கூரை) அமைக்கும் பணிகள் முடிந்தன. இன்னும் 32 பத்திகளில் பாவுகல் அமைக்கப்படவில்லை. இதனால் திறந்த வெளியாக உள்ளது. நிதி பற்றாக்குறையால் ஓராண்டிற்கு மேலாக பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், “ரூ.1.5 கோடியில் திட்டம் தயாரித்து அறநிலையத்துறைக்கு அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar