பதிவு செய்த நாள்
20
பிப்
2016
02:02
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால் கம்பம் நடும்
நிகழ்ச்சி நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான
தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 23 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, 7
மணியளவில், ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத், கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில், பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், தி.மு.க., நகர செயலாளர் மாதேஸ்வரன், கவுன்சிலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மயில் வாகனம், நந்தி வாகனம், நாகவாகனம் மற்றும் ரிஷப வாகன உற்சவம் நடக்கிறது.