திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2026 11:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர். இன்று வார விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். சகொளுத்தும் வெயிலிலும், பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். மேலும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.
முன்னதாக, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி – தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலைப்பாதையில் ஆட்டோ, வேன், பேருந்து போன்ற வாகனங்களுக்கு நே ற்று மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதை நுழைவு வாயிலில் இருந்து மலைக்கோவில் படா செட்டிக்குளம் வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.