Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... பொன்பெருமாள் மலையில் உழவாரப்பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2016
11:03

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 21 ஆண்டுகளுக்குப்பின் வரும் மார்ச், 18ல் நடக்கிறது. முன்னதாக, 27.5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. கோவை மாவட்ட அம்மன் திருத்தலங்களில் சூலக் கல் மாரியம்மன் கோவில் பிரபலமானது. சக்தி வாய்ந்த அம்மனை, 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆண்டுதோறும், மா விளக்கு எடுத்து வழிபடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவிழா, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கவில்லை. பல நுாறாண்டுகள் பழமையான திருத்தேர், புதுப்பிக்கப்பட்ட பிறகே, விழா நடத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டதே தாமதத்துக்கு காரணமாகும். பழுதடைந்த தேருக்கு பதிலாக, புதுத்தேர் அமைக்கும் திருப்பணிகள், 27.5 லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. வரும், 18ம் தேதி (பங்குனி, 5ம் தேதி), சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், 21 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இதற்காக, கோவில் சுற்றுச்சுவர் மற்றும் கோவில் வளாக தரைதள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில் வளாகத்தில், 15 தெய்வ சிலைகள் அமைக்கும் பணிகளும், யாகசாலை பணிகளும் வேகமாக நடக்கின்றன.

புரவிபாளையம் ஜமீனுக்கு உட்பட்ட, 8 கிராமங்களிலும், ஜமீனுக்கு உட்படாத, 10 கிராமங்கள் என, 18 கிராமங்கள், திருவிழா நாட்களில் விழாக்கோலம் கொண்டிருக்கும் என்பது குறிப் பிடத்தக்கது. முன்னதாக, வரும், 16ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. 17ம்தேதி காலை, 6:00 மணிககு மங்கள இசையும், தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. அன்று மாலை, 4:30 மணிக்கு புதிதாக, 27.5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. வரும், 18 ம்தேதி அதிகாலை, 5:0௦ மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்குகிறது. அன்று காலை, 6:30 மணிக்கு மேல், 8:00 மணிக்குள், மாரியம்மன், விநாயகர் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும், மகா அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar