கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2016 01:03
காளையார்கோவில்:கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 17ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்தார். நேற்று காலை 5மணிக்கு தேரில் எழுந்தருளினார். 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். அக்னிச்சட்டி எடுத்தும், கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி,இரவு பூம் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல்அலுவலர் இளங்கோவன் செய்துள்ளனர்.