இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 28 இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று மழையோ, தூறலோ பெய்யாததால் கிராம மக்கள் வருத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் விழாவின் கடைசி நாளான நேற்று மாலை 3 மணியளவில் தாயமங்கலத்தில் மழை ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் தாயமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.