திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே எத்திலோடு முத்தாலபுரத்தில் வெயிலுகந்த அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான அவ்வூரில் உள்ள 1.43 ஏக்கர் நிலத்தை விளாம்பட்டியை சேர்ந்த மாயத்தேவர் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். பல ஆண்டுகளாக குத்தகை கொடுக்கவில்லை. நிலத்தையும் ஆக்கிரமித்து வைத்திருந்தாராம். இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து உதவி கமிஷனர் அனிதா, இன்ஸ்பெக்டர் வீரசேகரன், பழநி இன்ஸ்பெக்டர் உமா, எஸ்.ஐ., செந்தில்குமார், வி.ஏ.ஓ., சிவகுமார், ஆர்.ஐ., சவுந்திரபாண்டியன் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டது. பின், கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரி வசம் ஒப்படைக்கப்பட்டது.