*தினமும் காலையில் எழுந்ததும் வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்று மனதாரச் சொல்லி அனைவரையும் வாழ்த்த வேண்டும். இந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்திற்கே நன்மை தரும். *பிறரை வாழ்த்தும் மனம் படைத்தவர்கள் செல்லும் இடம் எல்லாம் நன்மையே உண்டாகும். அவர்களால் தீயவர்களும் கூட நல்லவராக மாறி விடுவர். *உள்ளத்தில் உறுதி இருந்தால் உலகமே உங்கள் கைவசம் வந்து விடும். எண்ணத்தில் ஒழுங்கு இருந்தல் எண்ணியதெல்லாம் சிறப்பாக நடந்தேறும். *உணவின் சக்தி உடலுக்குள் மட்டுமே பாயும். எண்ணிய எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது. *எல்லா உயிர்களிடத்திலும் கடவுளைக் காண வேண்டும். இப்படிப்பட்ட உயர்நிலையைப் பெற நாம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். *தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் மனதைப் பொறுத்தது. மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால், அறிய நினைத்தால் படிப்படியாக அடங்கும். *நற்செயல்களில் ஈடுபட்டு அதனால் உலக மக்கள் பயனடைவதைக் காண்பவர்க்கே மனநிறைவு கிடைக்கும். அந்த நிலையில் மக்கள் வாயார வாழ்த்துவது தான் உண்மையான புகழாகும். *தனிமனிதனின் வாழ்வு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தால் சமுதாயம் முழுவதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். *நாம் அனைவரும் சமுதாயத்தின் உதவியுடன் தான் வாழ்கிறோம். அதற்கு நன்றிக்கடனாக நம்முடைய உடலாலும், அறிவாலும் சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். *உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இந்த மூன்றும் தான் நல்லவர்களின் அடையாளங்கள். *கடமையறிந்து செயலாற்றினால் சமுதாயத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும், நலன்களும் முழுமையாகக் காக்கப்படும். *மனத்துõய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சரியான ஓய்வு இவற்றை பின்பற்றினால் நோய் இல்லாமல் உடல் நலத்துடன் வாழ முடியும். *அன்பு, அருள், இன்முகம் இவற்றோடு கூடிய நல்லவர்களின் படங்களை வீட்டில் வையுங்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். *ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் பணியில் ஈடுபடுங்கள். குறிக்கோளை நோக்கி செயல்படுங்கள். வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். *உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் செயலாகவே விளங்குகிறது. இதை மனிதன் உணர்ந்து இயற்கையை மதித்து வாழ வேண்டும். *கடவுள் என்னும் பேரருட்சக்தி, நம்மை எல்லா நேரத்திலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (மகான் வேதாத்ரி மகரிஷி)