Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேர்தலில் நிற்கிறீர்களா? வெற்றிக்கு ... கோ பூஜை மந்திரங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்வாழ்த்து நான் சொல்வேன் நல்லபடி வாழ்கவென்று!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2016
04:05

*தினமும் காலையில் எழுந்ததும் வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்று மனதாரச் சொல்லி அனைவரையும் வாழ்த்த வேண்டும். இந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்திற்கே நன்மை தரும்.
*பிறரை வாழ்த்தும் மனம் படைத்தவர்கள் செல்லும் இடம் எல்லாம் நன்மையே உண்டாகும். அவர்களால் தீயவர்களும் கூட நல்லவராக மாறி விடுவர்.
*உள்ளத்தில் உறுதி இருந்தால் உலகமே உங்கள் கைவசம் வந்து விடும். எண்ணத்தில் ஒழுங்கு இருந்தல் எண்ணியதெல்லாம் சிறப்பாக நடந்தேறும்.
*உணவின் சக்தி உடலுக்குள் மட்டுமே பாயும். எண்ணிய எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது.
*எல்லா உயிர்களிடத்திலும் கடவுளைக் காண வேண்டும். இப்படிப்பட்ட உயர்நிலையைப் பெற நாம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
*தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் மனதைப் பொறுத்தது. மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால், அறிய நினைத்தால் படிப்படியாக அடங்கும்.
*நற்செயல்களில் ஈடுபட்டு அதனால் உலக மக்கள் பயனடைவதைக் காண்பவர்க்கே மனநிறைவு கிடைக்கும். அந்த நிலையில் மக்கள் வாயார வாழ்த்துவது தான் உண்மையான புகழாகும்.
*தனிமனிதனின் வாழ்வு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தால் சமுதாயம் முழுவதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
*நாம் அனைவரும் சமுதாயத்தின் உதவியுடன் தான் வாழ்கிறோம். அதற்கு நன்றிக்கடனாக நம்முடைய உடலாலும், அறிவாலும் சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வேண்டும்.
*உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இந்த மூன்றும் தான் நல்லவர்களின் அடையாளங்கள்.
*கடமையறிந்து செயலாற்றினால் சமுதாயத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும், நலன்களும் முழுமையாகக் காக்கப்படும்.
*மனத்துõய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சரியான ஓய்வு இவற்றை பின்பற்றினால் நோய் இல்லாமல் உடல் நலத்துடன் வாழ முடியும்.
*அன்பு, அருள், இன்முகம் இவற்றோடு கூடிய நல்லவர்களின் படங்களை வீட்டில் வையுங்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
*ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் பணியில் ஈடுபடுங்கள். குறிக்கோளை நோக்கி செயல்படுங்கள். வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்.
*உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் செயலாகவே விளங்குகிறது. இதை மனிதன் உணர்ந்து இயற்கையை மதித்து வாழ வேண்டும்.
*கடவுள் என்னும் பேரருட்சக்தி, நம்மை எல்லா நேரத்திலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (மகான் வேதாத்ரி மகரிஷி)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar