கோட்டை பெருமாள் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2016 12:05
சேலம்: அட்சய திருதியையொட்டி, நேற்று காலை, 6 மணிக்கு, கோட்டை பெருமாள் கோவிலில் அதிகாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், ஆஞ்சநேயருக்கு, வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அட்சய திருதியையில் வாங்கிய நகைகளை, சாமியிடம் வைத்து பூஜை செய்து வீட்டுக்கு எடுத்து சென்றனர்.