கோவை -திருப்பூர் வழியில் உள்ள திருமுருகன்பூண்டி சிவன் கோயிலுக்கு வெளியே ஒரு பாறைக்குழி உள்ளது. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர் பொங்கும் அதிசய நிகழ்வு நடக்கிறது. சூரனைக் கொன்றதால் தோஷம் பீடிக்கப்பட்ட முருகன் இத்தல ஈசனை வணங்கியதால் அவரிடமிருந்து விலகிய பிரம்மஹத்தியை கல் வடிவில் இங்கு காணலாம்.