சிதம்பரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் வழியில் வல்லம்படுகை பருதேசியப்பர் கோயிலில் வருடந்தோறும் வைகாசி விசாகத்தன்று 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் 10 -ம் நாள் கொள்ளிடக்கரையில் இருந்து அலகு குத்தியும், பால் காவடி எடுத்தும் ஊர்வலமாக பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். 12ம் நாள் பாவாடைராயனுக்கு சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவுபெறுகிறது.