Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மச்சானை பார்த்தீங்களா...! காலை மாலை பெயர் வந்தது எப்படி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2016
04:05

*நல்ல குடும்பமே பல்கலைக்கழகம். குடும்பக் கடமைகளை விட்டு சமூகசேவையில் ஈடுபடுவது நல்லதல்ல. குடும்பத்தினரைப் புறக்கணித்து விட்டு, சமூகசேவை செய்பவன் பிற்காலத்தில் வருந்த நேரிடும்.
*கோவில் வழிபாடும், கடவுளுக்கு நைவேத்யம் படைப்பதும் அவருக்கு நன்றி செலுத்துவதன் அடையாளமே. கடவுளின் அருள் இல்லாமல் உலகில் சிறு புல்லைக் கூட படைக்கும் சக்தி நமக்கு கிடையாது.
*உடுத்தும் உடை அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் மனத்தூய்மையை யாரும் பொருட்படுத்துவதுஇல்லை. கடவுளைச் சரணடைவதும், தியானம் செய்வதும் மனதை தூய்மைப்படுத்த உதவும்.
*பாவம் தீர வழி தெரியாமல் அலைகிறார்கள். கணப்பொழுதில் பாவம் போக்கும் பொருள் ஒன்று இருக்கிறது. அதுவே கடவுளின் திருநாமம். நாக்கு பெற்றதன் பயன்
பக்தியுடன் கடவுளின் பெயரைச் சொல்வது மட்டுமே.
*மனிதன் வெளி உலகத்தில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான். உண்மையில் மகிழ்ச்சி மனதில் இருந்து தான் பிறக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள முடியாமல் அறியாமையில் அவன் மூழ்கிக் கிடக்கிறான்.
*வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் அதன்பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியும், அழகும் வெளிப்படத் தொடங்கும். அதனால் ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றுங்கள்.
*கடவுள் மனிதனுக்கு நல்ல புத்தியும், அதை செயல்படுத்தும் சக்தியும் கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் மட்டுமே எப்போதும் ஈடுபடவேண்டும்.
*பணம், பேச்சு இரண்டிலும் அளவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். அவசியமில்லாத விஷயம் பற்றி பேசுவதோ, வீணாகப் பணம் செலவழிப்பதோ தீமையில் முடியும்.
*சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்லெண்ணத்தை பேச்சில் வெளிப்படுத்துவதே சத்தியம். அதனால் எல்லோருக்கும் நன்மையே உண்டாகும்.
*தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போனால் நிம்மதியாக வாழ முடியாது. மனதில் போட்டி, பொறாமை இருக்கும் வரை மனநிறைவு ஏற்படாது. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே சிறந்தது.
*கடவுளைச் சிந்தித்து செய்யும் எந்த செயலும் நற்பலனைக் கொடுக்கும். அறியாமல் செய்தாலும் கூட வழிபாட்டுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
*வாழ்க்கையை லாபநஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரி போல கருதுவது கூடாது. பிறருடைய துன்பத்தைத் தீர்க்க நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
*எடுத்துச் சொல்வதை விட எடுத்துக் காட்டாக விளங்குவதே சிறந்தது.
பிறருக்கு உபதேசம் செய்ய விரும்பினால், அதற்கு முதலில் தகுதிப்படுத்திக் கொள்வது அவசியம். (மகான் காஞ்சிப் பெரியவர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar